Pages

Sunday, January 8, 2017

8.16 - திருவாசகம் - திருப்பொன்னூசல் - tiruvāsagam - tiruppoṉṉūsal

38) பதிகம் 8.16 - திருவாசகம் - திருப்பொன்னூசல் - tiruvāsagam - tiruppoṉṉūsal

Here are the links to verses and audio of this padhigam's discussion:
8.16 - tiruppoṉṉūsal

Verses - PDF: 8.16 - திருவாசகம் - திருப்பொன்னூசல் - tiruvāsagam - tiruppoṉṉūsal

Discussion audio: Available on YouTube. See links below. (If you need MP3 files, please use the contact form on the right).

****
On YouTube:
Tamil discussion:
மாணிக்க வாசகர் வரலாறு - Manikka Vachakar story: https://youtu.be/8gSrxdTBscc
****

V. Subramanian

=============

(Verses in original Tamil version & word separated Tamil / English scripts) - print only those pages you need)

திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16
--------------
பாடல் எண் : 1
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 2
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்றங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்
கூன்றங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 3
முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 4
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 5
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 6
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 7
உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 8
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ.

பாடல் எண் : 9
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

============================= ============================

Word separated version:
--------------
திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16
--------------
பாடல் எண் : 1
சீர்-ஆர் பவளங்-கால் முத்தம் கயிறாக
ஏர்-ஆரும் பொற்பலகை ஏறி இனிது-அமர்ந்து
நாரா யணன்-அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்து-அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்-தாள் இணை-பாடி
போர்-ஆர்-வேற் கண்-மடவீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 2
மூன்று-அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன் தங்கித் தித்தித்து அமுது-ஊறித் தான்-தெளிந்து-அங்கு
ஊன் தங்கி நின்று-உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குல-மஞ்ஞை
போன்று-அங்கு அன-நடையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 3
முன்-ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்-குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்-நிற்பத்
தன்-நீறு எனக்கு-அருளித் தன்-கருணை வெள்ளத்து
மன்-ஊற மன்னு-மணி உத்தர கோசமங்கை
மின்-ஏறு மாட வியன்-மாளிகை பாடிப்
பொன்-ஏறு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 4
நஞ்சு-அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு-தோய் மாட-மணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று-அமுதம் ஊறிக் கருணை-செய்து
துஞ்சல் பிறப்பு-அறுப்பான் தூய புகழ்-பாடிப்
புஞ்சம்-ஆர் வெள்-வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 5
ஆணோ அலியோ அரிவையோ என்று-இருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்-குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டு-அருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோண்-ஆர் பிறைச்-சென்னிக் கூத்தன் குணம்-பரவிப்
பூண்-ஆர் வன-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 6
மாது-ஆடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாது-ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்-பிறவித்
தீது-ஓடா வண்ணம் திகழப் பிறப்பு-அறுப்பான்
காது-ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது-ஆடு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 7
உன்னற்கு அரிய-திரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்-புகழே
பன்னிப் பணிந்து-இறைஞ்சப் பாவங்கள் பற்று-அறுப்பான்
அன்னத்தின் மேல்-ஏறி ஆடும்-அணி மயில்-போல்
என்-அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்-பாடிப்
பொன்-ஒத்த பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 8
கோல வரைக்-குடுமி வந்து குவலயத்து
சால அமுது-உண்டு தாழ்-கடலின் மீது-எழுந்து
ஞாலம் மிகப்-பரிமேற் கொண்டு நமை-ஆண்டான்
சீலம் திகழும் திரு-உத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்-பாடிப்
பூலித்து அகங்-குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் : 9
தெங்கு-லவு சோலைத் திரு-த்தர கோசமங்கை
தங்கு-லவு சோதித் தனி-ருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு-றுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்கு-லவு கோதையும் தானும் பணி-கொண்ட
கொங்கு-லவு கொன்றைச் சடையான் குணம்-பரவிப்
பொங்கு-லவு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

================== ==========================

Word separated version:
--------------
tiruvāsagam - tiruppoṉṉūsal - 8.16
--------------
pāḍal eṇ : 1
sīr-ār pavaḷaṅ-kāl muttam kayiṟāga
ēr-ārum poṟpalagai ēṟi iṉidu-amarndu
nārā yaṇaṉ-aṟiyā nāṇmalarttāḷ nāyaḍiyēṟku
ūrāgat tandu-aruḷum uttara kōsamaṅgai
ārā amudiṉ aruḷ-tāḷ iṇai-pāḍi
pōr-ār-vēṟ kaṇ-maḍavīr poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 2
mūṇḍru-aṅgu ilaṅgu nayaṉattaṉ mūvāda
vāṉ taṅgu dēvargaḷum kāṇā malaraḍigaḷ
tēṉ taṅgit tittittu amudu-ūṟit tāṉ-teḷindu-aṅgu
ūṉ taṅgi niṇḍru-urukkum uttara kōsamaṅgaik
kōṉ taṅgu iḍaimarudu pāḍik kula-maññai
pōṇḍru-aṅgu aṉa-naḍaiyīr poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 3
muṉ-īṟum ādiyum illāṉ muṉivar-kuḻām
paṉṉūṟu kōḍi imaiyōrgaḷ tām-niṟpat
taṉ-nīṟu eṉakku-aruḷit taṉ-karuṇai veḷḷattu
maṉ-ūṟa maṉṉu-maṇi uttara kōsamaṅgai
miṉ-ēṟu māḍa viyaṉ-māḷigai pāḍip
poṉ-ēṟu pūṇ-mulaiyīr poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 4
nañju-amar kaṇḍattaṉ aṇḍattavar nādaṉ
mañju-tōy māḍa-maṇi uttara kōsamaṅgai
añjolāḷ taṉṉōḍum kūḍi aḍiyavargaḷ
neñjuḷē niṇḍru-amudam ūṟik karuṇai-seydu
tuñjal piṟappu-aṟuppāṉ tūya pugaḻ-pāḍip
puñjam-ār veḷ-vaḷaiyīr poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 5
āṇō aliyō arivaiyō eṇḍru-iruvar
kāṇāk kaḍavuḷ karuṇaiyiṉāl dēvar-kuḻām
nāṇāmē uyya āṭkoṇḍu-aruḷi nañjudaṉai
ūṇāga uṇḍaruḷum uttara kōsamaṅgaik
kōṇ-ār piṟaic-ceṉṉik kūttaṉ guṇam-paravip
pūṇ-ār vaṉa-mulaiyīr poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 6
mādu-āḍu pāgattaṉ uttara kōsamaṅgait
tādu-āḍu koṇḍraic caḍaiyāṉ aḍiyāruḷ
kōdāṭṭi nāyēṉai āṭkoṇḍu eṉ tol-piṟavit
tīdu-ōḍā vaṇṇam tigaḻap piṟappu-aṟuppāṉ
kādu-āḍu kuṇḍalaṅgaḷ pāḍik kasindu aṉbāl
pōdu-āḍu pūṇ-mulaiyīr poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 7
uṉṉaṟku ariya-tiru uttara kōsamaṅgai
maṉṉip polindirunda māmaṟaiyōṉ taṉ-pugaḻē
paṉṉip paṇindu-iṟaiñjap pāvaṅgaḷ paṭru-aṟuppāṉ
aṉṉattiṉ mēl-ēṟi āḍum-aṇi mayil-pōl
eṉ-attaṉ eṉṉaiyum āṭkoṇḍāṉ eḻil-pāḍip
poṉ-otta pūṇ-mulaiyīr poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 8
kōla varaik-kuḍumi vandu kuvalayattu
sāla amudu-uṇḍu tāḻ-kaḍaliṉ mīdu-eḻundu
ñālam migap-parimēṟ koṇḍu namai-āṇḍāṉ
sīlam tigaḻum tiru-uttara kōsamaṅgai
mālukku ariyāṉai vāyāra nām-pāḍip
pūlittu agaṅ-kuḻaindu poṉṉūsal āḍāmō.

pāḍal eṇ : 9
teṅgu-ulavu sōlait tiru-uttara kōsamaṅgai
taṅgu-ulavu sōdit taṉi-uruvam vandaruḷi
eṅgaḷ piṟappu-aṟuttiṭṭu endaramum āṭkoḷvāṉ
paṅgu-ulavu kōdaiyum tāṉum paṇi-koṇḍa
koṅgu-ulavu koṇḍraic caḍaiyāṉ guṇam-paravip
poṅgu-ulavu pūṇ-mulaiyīr poṉṉūsal āḍāmō.
================== ==========================