Sunday, September 20, 2026

6.6 - அரவணையான் சிந்தித்து (திருவடித் திருத்தாண்டகம்) - aravaNaiyAn sindhiththu

181) 6.6 - அரவணையான் சிந்தித்து (திருவடித் திருத்தாண்டகம்) - aravaNaiyAn sindhiththu

திருநாவுக்கரசர் தேவாரம் - 6.6 - அரவணையான் சிந்தித்து - திருவதிகை - (திருவடித் திருத்தாண்டகம்)

tirunāvukkarasar tēvāram - 6.6 - aravaṇaiyān sindittu - tiruvadigai - (tiruvaḍit tiruttāṇḍagam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1inkiT-jp5PoWaI8xq2uVxd-6aH5jvbY1/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1:

Part-2:

Part-3:

***
V. Subramanian

================

 Verses in Tamil, Roman (ISO 15919), Easy English, Devanagari, and Telugu scripts.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.6 – திருவதிகை - "திருவடித் திருத்தாண்டகம்"


Padhigam background:

திருநாவுக்கரசர் திருவதிகையில் பாடியருளிய பல பதிகங்களில் ஒன்று இது.

பாடல்தோறும் அடிதோறும் ஈசன் திருவடியைப் போற்றும் பதிகம். ஆதலால், "திருவடித் திருத்தாண்டகம்" என்ற சிறப்புப்பெயர் உடையது.


(ஈசன் திருவடியைச் சிறப்பித்துப் போற்றும் வேறு சில பதிகங்கள்:

4.92 - "சிந்திப் பரியன ... ... ஐயாறன் அடித்தலமே"

4.100 - "மன்னு மலைமகள் கையால் வருடின ... ... இன்னம்பரான்றன் இணையடியே")

--------


Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai

# 1409 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 144

அரியயனுக் கரியானை யடியவருக் கெளியானை

விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்தமுதைத்

தெரிவரிய பெருந்தகைமைத் திருநாவுக் கரசுமனம்

பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள்,


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.6 – திருவதிகை - "திருவடித் திருத்தாண்டகம்"


பாடல் எண் : 1

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி

.. அருமறையான் சென்னிக் கணியாமடி

சரவணத்தான் கைதொழுது சாரும்மடி

.. சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி

பரவுவார் பாவம் பறைக்கும்மடி

.. பதினெண் கணங்களும் பாடும்மடி

திரைவிரவு தென்கெடில நாடன்னடி

.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.


பாடல் எண் : 2

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி

.. குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி

படுமுழவம் பாணி பயிற்றும்மடி

.. பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி

கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி

.. கடல்வையங் காப்பான் கருதும்மடி

நெடுமதியங் கண்ணி யணிந்தானடி

.. நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.


பாடல் எண் : 3

வைதெழுவார் காமம்பொய் போகாவடி

.. வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி

கைதொழுது நாமேத்திக் காணும்மடி

.. கணக்கு வழக்கைக் கடந்தவடி

நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி

.. நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி

தெய்வப் புனற்கெடில நாடன்னடி

.. திருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி.

(* For interpretation : நாம் தொழுது ஏத்தி, நெய் ஆட்டும் அடி)


பாடல் எண் : 4

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி

.. அழகெழுத லாகா அருட்சேவடி

சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி

.. சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி

பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி

.. பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி

திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி

.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.


பாடல் எண் : 5

ஒருகாலத் தொன்றாகி நின்றவடி

.. ஊழிதோ றூழி உயர்ந்தவடி

பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி

.. புகழ்வார் புகழ்தகைய வல்லவடி

இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி

.. இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி

திருவதிகைத் தென்கெடில நாடன்னடி

.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.


பாடல் எண் : 6

திருமகட்குச் செந்தா மரையாமடி

.. சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி

பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி

.. புகழ்வார் புகழ்தகைய வல்லவடி

உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி

.. உருவென் றுணரப் படாதவடி

திருவதிகைத் தென்கெடில நாடன்னடி

.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.


பாடல் எண் : 7

உரைமாலை யெல்லா முடையவடி

.. உரையா லுணரப் படாதவடி

வரைமாதை வாடாமை வைக்கும்மடி

.. வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி

அரைமாத் திரையி லடங்கும்மடி

.. அகலம் அளக்கிற்பா ரில்லாவடி

கரைமாங் கலிக்கெடில நாடன்னடி

.. கமழ்வீரட்டானக் கபாலியடி.


பாடல் எண் : 8

நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி

.. நடுவா யுலகநா டாயவடி

செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி

.. தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி

மறுமதியை மாசு கழுவும்மடி

.. மந்திரமுந் தந்திரமும் ஆயவடி

செறிகெடில நாடர் பெருமானடி

.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.

(* உலக-நாடு = உலகம் + நாடு)


பாடல் எண் : 9

அணியனவுஞ் சேயனவு மல்லாவடி

.. யடியார்கட் காரமுத மாயவடி

பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி

.. பற்றற்றார் பற்றும் பவளவடி

மணியடி பொன்னடி மாண்பாமடி

.. மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி

தணிபாடு தண்கெடில நாடன்னடி

.. தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி.


பாடல் எண் : 10

அந்தா மரைப்போ தலர்ந்தவடி

.. அரக்கனையும் ஆற்ற லழித்தவடி

முந்தாகி முன்னே முளைத்தவடி

.. முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி

பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி

.. பவளத் தடவரையே போல்வானடி

வெந்தார் சுடலைநீ றாடும்மடி

.. வீரட்டங் காதல் விமலன்னடி.

=============================


Word separated version:


Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai

# 1409 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 144

அரி-அயனுக்கு அரியானை, அடியவருக்கு எளியானை,

விரி-புனல்-சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்,

தெரிவு-அரிய பெருந்தகைமைத் திருநாவுக்கரசு மனம்

பரிவு-உறு செந்தமிழ்ப்-பாட்டுப் பல பாடிப் பணிசெயும் நாள்,


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.6 – திருவதிகை - "திருவடித் திருத்தாண்டகம்"


பாடல் எண் : 1

அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி;

.. அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;

சரவணத்தான் கைதொழுது சாரும் அடி;

.. சார்ந்தார்கட்கு-எல்லாம் சரண் ஆம் அடி;

பரவுவார் பாவம் பறைக்கும் அடி;

.. பதினெண்-கணங்களும் பாடும் அடி;

திரை விரவு தென்-கெடில நாடன் அடி;

.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.


பாடல் எண் : 2

கொடு-வினையார் என்றும் குறுகா அடி;

.. குறைந்து-அடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி;

படு-முழவம் பாணி பயிற்றும் அடி;

.. பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி;

கடு-முரண்-ஏறு ஊர்ந்தான் கழற்சேவடி;

.. கடல்-வையம் காப்பான் கருதும் அடி;

நெடு-மதியம் கண்ணி அணிந்தான் அடி;

.. நிறை-கெடில வீரட்டம் நீங்கா அடி.


பாடல் எண் : 3

வைது-எழுவார் காமம் பொய் போகா அடி;

.. வஞ்ச-வலைப்பாடு ஒன்று-இல்லா அடி;

கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி;

.. கணக்கு-வழக்கைக் கடந்த அடி;

நெய், தொழுது நாம் ஏத்தி, ஆட்டும் அடி; *

.. நீள்-விசும்பை ஊடறுத்து நின்ற அடி;

தெய்வப் புனற்-கெடில நாடன் அடி;

.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.

(* For interpretation : நாம் தொழுது ஏத்தி, நெய் ஆட்டும் அடி)


பாடல் எண் : 4

அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி;

.. அழகு எழுதல்-ஆகா அருட்-சேவடி;

சுரும்பித்த, வண்டினங்கள் சூழ்ந்த, அடி;

.. சோமனையும் காலனையும் காய்ந்த அடி;

பெரும்-பித்தர் கூடிப் பிதற்றும் அடி;

.. பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி;

திருந்து-நீர்த் தென்-கெடில நாடன் அடி;

.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.


பாடல் எண் : 5

ஒரு-காலத்து ஒன்று-ஆகி நின்ற அடி;

.. ஊழிதோறு ஊழி உயர்ந்த அடி;

பொரு-கழலும் பல்-சிலம்பும் ஆர்க்கும் அடி;

.. புகழ்வார் புகழ்-தகைய வல்ல அடி;

இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி;

.. இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி;

திருவதிகைத் தென்-கெடில நாடன் அடி;

.. திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.


பாடல் எண் : 6

திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;

.. சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி;

பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி;

.. புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி;

உருவிரண்டும் ஒன்றோடு-ஒன்று ஒவ்வா அடி;

.. உருவென்று உணரப்-படாத அடி;

திருவதிகைத் தென்-கெடில நாடன் அடி;

.. திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.


பாடல் எண் : 7

உரைமாலை-எல்லாம் உடைய அடி;

.. உரையால் உணரப்படாத அடி;

வரைமாதை வாடாமை வைக்கும் அடி;

.. வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் அடி;

அரை-மாத்திரையில் அடங்கும் அடி;

.. அகலம் அளக்கிற்பார் இல்லா அடி;

கரை-மாங்கலிக்-கெடில நாடன் அடி;

.. கமழ் வீரட்டானக் கபாலி அடி.


பாடல் எண் : 8

நறுமலராய் நாறும் மலர்ச்-சேவடி;

.. நடுவாய் உலக-நாடு ஆய அடி; *

செறி-கதிரும் திங்களுமாய் நின்ற அடி;

.. தீத்-திரளாய் உள்ளே திகழ்ந்த அடி;

மறு-மதியை மாசு கழுவும் அடி;

.. மந்திரமும் தந்திரமும் ஆய அடி;

செறி-கெடில நாடர் பெருமான் அடி;

.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.

(* உலக-நாடு = உலகம் + நாடு)


பாடல் எண் : 9

அணியனவும் சேயனவும் அல்லா அடி;

.. அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி;

பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி;

.. பற்றற்றார் பற்றும் பவள அடி;

மணி-அடி; பொன்-அடி; மாண்பாம் அடி;

.. மருந்தாய்ப் பிணி-தீர்க்க வல்ல அடி;

தணி-பாடு தண்-கெடில நாடன் அடி;

.. தகை-சார் வீரட்டத்-தலைவன் அடி.


பாடல் எண் : 10

அந்தாமரைப்-போது அலர்ந்த அடி;

.. அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி;

முந்தாகி முன்னே முளைத்த அடி;

.. முழங்கு-அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி;

பந்தாடு மெல்-விரலாள் பாகன் அடி;

.. பவளத் தட-வரையே போல்வான் அடி;

வெந்தார் சுடலை-நீறு ஆடும் அடி;

.. வீரட்டம் காதல் விமலன் அடி.

=============================

Roman (ISO 15919)


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai

# 1409 - periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 144

ari-ayanukku ariyānai, aḍiyavarukku eḷiyānai,

viri-punal-sūḻ tiruvadigai vīraṭṭānattu amudait,

terivu-ariya perundagaimait tirunāvukkarasu manam

parivu-uṟu sendamiḻp-pāṭṭup pala pāḍip paṇiseyum nāḷ,


tirunāvukkarasar tēvāram - padigam 6.6 – tiruvadigai - "tiruvaḍit tiruttāṇḍagam"


pāḍal eṇ : 1

aravaṇaiyān sindittu araṭrum aḍi;

.. arumaṟaiyān sennikku aṇi ām aḍi;

saravaṇattān kaitoḻudu sārum aḍi;

.. sārndārgaṭku-ellām saraṇ ām aḍi;

paravuvār pāvam paṟaikkum aḍi;

.. padineṇ-gaṇaṅgaḷum pāḍum aḍi;

tirai viravu ten-keḍila nāḍan aḍi;

.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.


pāḍal eṇ : 2

koḍu-vinaiyār eṇḍrum kuṟugā aḍi;

.. kuṟaindu-aḍaindār āḻāmaik kākkum aḍi;

paḍu-muḻavam pāṇi payiṭrum aḍi;

.. padaitteḻunda veṅgūṭraip pāynda aḍi;

kaḍu-muraṇ-ēṟu ūrndān kaḻaṟcēvaḍi;

.. kaḍal-vaiyam kāppān karudum aḍi;

neḍu-madiyam kaṇṇi aṇindān aḍi;

.. niṟai-keḍila vīraṭṭam nīṅgā aḍi.


pāḍal eṇ : 3

vaidu-eḻuvār kāmam poy pōgā aḍi;

.. vañja-valaippāḍu oṇḍru-illā aḍi;

kaidoḻudu nām ēttik kāṇum aḍi;

.. kaṇakku-vaḻakkaik kaḍanda aḍi;

ney, toḻudu nām ētti, āṭṭum aḍi; *

.. nīḷ-visumbai ūḍaṟuttu niṇḍra aḍi;

teyvap punaṟ-keḍila nāḍan aḍi;

.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.

(* For interpretation : nām toḻudu ētti, ney āṭṭum aḍi)


pāḍal eṇ : 4

arumbitta seññāyiṟu ēykkum aḍi;

.. aḻagu eḻudal-āgā aruṭ-cēvaḍi;

surumbitta, vaṇḍinaṅgaḷ sūḻnda, aḍi;

.. sōmanaiyum kālanaiyum kāynda aḍi;

perum-pittar kūḍip pidaṭrum aḍi;

.. piḻaittār piḻaippu aṟiya valla aḍi;

tirundu-nīrt ten-keḍila nāḍan aḍi;

.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.


pāḍal eṇ : 5

oru-kālattu oṇḍru-āgi niṇḍra aḍi;

.. ūḻidōṟu ūḻi uyarnda aḍi;

poru-kaḻalum pal-silambum ārkkum aḍi;

.. pugaḻvār pugaḻ-tagaiya valla aḍi;

irunilattār inbuṭru aṅgu ēttum aḍi;

.. inbuṭrār iṭṭa pū ēṟum aḍi;

tiruvadigait ten-keḍila nāḍan aḍi;

.. tiruvīraṭṭānattu em selvan aḍi.


pāḍal eṇ : 6

tirumagaṭkuc cendāmarai ām aḍi;

.. siṟandavarkkut tēnāy viḷaikkum aḍi;

poruḷavarkkup ponnuraiyāy niṇḍra aḍi;

.. pugaḻvār pugaḻ tagaiya valla aḍi;

uruviraṇḍum oṇḍrōḍu-oṇḍru ovvā aḍi;

.. uruveṇḍru uṇarap-paḍāda aḍi;

tiruvadigait ten-keḍila nāḍan aḍi;

.. tiruvīraṭṭānattu em selvan aḍi.


pāḍal eṇ : 7

uraimālai-ellām uḍaiya aḍi;

.. uraiyāl uṇarappaḍāda aḍi;

varaimādai vāḍāmai vaikkum aḍi;

.. vānavargaḷ tām vaṇaṅgi vāḻttum aḍi;

arai-māttiraiyil aḍaṅgum aḍi;

.. agalam aḷakkiṟpār illā aḍi;

karai-māṅgalik-keḍila nāḍan aḍi;

.. kamaḻ vīraṭṭānak kabāli aḍi.


pāḍal eṇ : 8

naṟumalarāy nāṟum malarc-cēvaḍi;

.. naḍuvāy ulaga-nāḍu āya aḍi; *

seṟi-kadirum tiṅgaḷumāy niṇḍra aḍi;

.. tīt-tiraḷāy uḷḷē tigaḻnda aḍi;

maṟu-madiyai māsu kaḻuvum aḍi;

.. mandiramum tandiramum āya aḍi;

seṟi-keḍila nāḍar perumān aḍi;

.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.

(* ulaga-nāḍu = ulagam + nāḍu)


pāḍal eṇ : 9

aṇiyanavum sēyanavum allā aḍi;

.. aḍiyārgaṭku āramudam āya aḍi;

paṇibavarkkup pāṅgāga valla aḍi;

.. paṭraṭrār paṭrum pavaḷa aḍi;

maṇi-aḍi; pon-aḍi; māṇbām aḍi;

.. marundāyp piṇi-tīrkka valla aḍi;

taṇi-pāḍu taṇ-keḍila nāḍan aḍi;

.. tagai-sār vīraṭṭat-talaivan aḍi.


pāḍal eṇ : 10

andāmaraip-pōdu alarnda aḍi;

.. arakkanaiyum āṭral aḻitta aḍi;

mundāgi munnē muḷaitta aḍi;

.. muḻaṅgu-aḻalāy nīṇḍa em mūrtti aḍi;

pandāḍu mel-viralāḷ pāgan aḍi;

.. pavaḷat taḍa-varaiyē pōlvān aḍi;

vendār suḍalai-nīṟu āḍum aḍi;

.. vīraṭṭam kādal vimalan aḍi.


=============================


Easy English


ee = ; oo = ; n = /; N = ; = ta/da; = tha/dha; R = ; tra = ற்ற; ndra = ன்ற; zh =

Word separated version:

Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in thiruvadhigai

# 1409 - periyapurāNam - thirunāvukkarasar purāNam - 144

ari-ayanukku ariyānai, adiyavarukku eLiyānai,

viri-punal-soozh thiruvadhigai veerattānaththu amudhaith,

therivu-ariya perundhagaimaith thirunāvukkarasu manam

parivu-uṟu sendhamizhp-pāttup pala pādip paNiseyum nāL,


thirunāvukkarasar thēvāram - padhigam 6.6 – thiruvadhigai - "thiruvadith thiruththāNdagam"


pādal eN : 1

aravaNaiyān sindhiththu aratrum adi;

.. arumaṟaiyān sennikku aNi ām adi;

saravaNaththān kaithozhudhu sārum adi;

.. sārndhārgatku-ellām saraN ām adi;

paravuvār pāvam paṟaikkum adi;

.. padhineN-gaNaṅgaLum pādum adi;

thirai viravu then-kedila nādan adi;

.. thiru-veerattānaththu em selvan adi.


pādal eN : 2

kodu-vinaiyār endrum kuṟugā adi;

.. kuṟaindhu-adaindhār āzhāmaik kākkum adi;

padu-muzhavam pāNi payitrum adi;

.. padhaiththezhundha veṅgootraip pāyndha adi;

kadu-muraN-ēṟu oorndhān kazhaṟcēvadi;

.. kadal-vaiyam kāppān karudhum adi;

nedu-madhiyam kaNNi aNindhān adi;

.. niṟai-kedila veerattam neeṅgā adi.


pādal eN : 3

vaidhu-ezhuvār kāmam poy pōgā adi;

.. vañja-valaippādu ondru-illā adi;

kaidhozhudhu nām ēththik kāNum adi;

.. kaNakku-vazhakkaik kadandha adi;

ney, thozhudhu nām ēththi, āttum adi; *

.. neeL-visumbai oodaṟuththu nindra adi;

theyvap punaṟ-kedila nādan adi;

.. thiru-veerattānaththu em selvan adi.

(* For interpretation : nām thozhudhu ēththi, ney āttum adi)


pādal eN : 4

arumbiththa seññāyiṟu ēykkum adi;

.. azhagu ezhudhal-āgā arut-chēvadi;

surumbiththa, vaNdinaṅgaL soozhndha, adi;

.. sōmanaiyum kālanaiyum kāyndha adi;

perum-piththar koodip pidhatrum adi;

.. pizhaiththār pizhaippu aṟiya valla adi;

thirundhu-neerth then-kedila nādan adi;

.. thiru-veerattānaththu em selvan adi.


pādal eN : 5

oru-kālaththu ondru-āgi nindra adi;

.. oozhidhōṟu oozhi uyarndha adi;

poru-kazhalum pal-silambum ārkkum adi;

.. pugazhvār pugazh-thagaiya valla adi;

irunilaththār inbutru aṅgu ēththum adi;

.. inbutrār itta poo ēṟum adi;

thiruvadhigaith then-kedila nādan adi;

.. thiruveerattānaththu em selvan adi.


pādal eN : 6

thirumagatkuc cendhāmarai ām adi;

.. siṟandhavarkkuth thēnāy viLaikkum adi;

poruLavarkkup ponnuraiyāy nindra adi;

.. pugazhvār pugazh thagaiya valla adi;

uruviraNdum ondrōdu-ondru ovvā adi;

.. uruvendru uNarap-padādha adi;

thiruvadhigaith then-kedila nādan adi;

.. thiruveerattānaththu em selvan adi.


pādal eN : 7

uraimālai-ellām udaiya adi;

.. uraiyāl uNarappadādha adi;

varaimādhai vādāmai vaikkum adi;

.. vānavargaL thām vaNaṅgi vāzhththum adi;

arai-māththiraiyil adaṅgum adi;

.. agalam aLakkiṟpār illā adi;

karai-māṅgalik-kedila nādan adi;

.. kamazh veerattānak kabāli adi.


pādal eN : 8

naṟumalarāy nāṟum malarc-cēvadi;

.. naduvāy ulaga-nādu āya adi; *

seṟi-kadhirum thiṅgaLumāy nindra adi;

.. theeth-thiraLāy uLLē thigazhndha adi;

maṟu-madhiyai māsu kazhuvum adi;

.. mandhiramum thandhiramum āya adi;

seṟi-kedila nādar perumān adi;

.. thiru-veerattānaththu em selvan adi.

(* ulaga-nādu = ulagam + nādu)


pādal eN : 9

aNiyanavum sēyanavum allā adi;

.. adiyārgatku āramudham āya adi;

paNibavarkkup pāṅgāga valla adi;

.. patratrār patrum pavaLa adi;

maNi-adi; pon-adi; māNbām adi;

.. marundhāyp piNi-theerkka valla adi;

thaNi-pādu thaN-kedila nādan adi;

.. thagai-sār veerattath-thalaivan adi.


pādal eN : 10

andhāmaraip-pōdhu alarndha adi;

.. arakkanaiyum ātral azhiththa adi;

mundhāgi munnē muLaiththa adi;

.. muzhaṅgu-azhalāy neeNda em moorththi adi;

pandhādu mel-viralāL pāgan adi;

.. pavaLath thada-varaiyē pōlvān adi;

vendhār sudalai-neeṟu ādum adi;

.. veerattam kādhal vimalan adi.


=============================


Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai

# 1409 - पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 144

अरि-अयनुक्कु अरियानै, अडियवरुक्कु ऎळियानै,

विरि-पुनल्-सूऴ् तिरुवदिगै वीरट्टानत्तु अमुदैत्,

तॆरिवु-अरिय पॆरुन्दगैमैत् तिरुनावुक्करसु मनम्

परिवु-उऱु सॆन्दमिऴ्प्-पाट्टुप् पल पाडिप् पणिसॆयुम् नाळ्,


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.6 – तिरुवदिगै - "तिरुवडित् तिरुत्ताण्डगम्"


पाडल् ऎण् : 1

अरवणैयान् सिन्दित्तु अरट्रुम् अडि;

.. अरुमऱैयान् सॆन्निक्कु अणि आम् अडि;

सरवणत्तान् कैतॊऴुदु सारुम् अडि;

.. सार्न्दार्गट्कु-ऎल्लाम् सरण् आम् अडि;

परवुवार् पावम् पऱैक्कुम् अडि;

.. पदिनॆण्-गणङ्गळुम् पाडुम् अडि;

तिरै विरवु तॆन्-कॆडिल नाडन् अडि;

.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.


पाडल् ऎण् : 2

कॊडु-विनैयार् ऎण्ड्रुम् कुऱुगा अडि;

.. कुऱैन्दु-अडैन्दार् आऴामैक् काक्कुम् अडि;

पडु-मुऴवम् पाणि पयिट्रुम् अडि;

.. पदैत्तॆऴुन्द वॆङ्गूट्रैप् पाय्न्द अडि;

कडु-मुरण्-एऱु ऊर्न्दान् कऴऱ्‌चेवडि;

.. कडल्-वैयम् काप्पान् करुदुम् अडि;

नॆडु-मदियम् कण्णि अणिन्दान् अडि;

.. निऱै-कॆडिल वीरट्टम् नीङ्गा अडि.


पाडल् ऎण् : 3

वैदु-ऎऴुवार् कामम् पॊय् पोगा अडि;

.. वञ्ज-वलैप्पाडु ऒण्ड्रु-इल्ला अडि;

कैदॊऴुदु नाम् एत्तिक् काणुम् अडि;

.. कणक्कु-वऴक्कैक् कडन्द अडि;

नॆय्, तॊऴुदु नाम् एत्ति, आट्टुम् अडि; *

.. नीळ्-विसुम्बै ऊडऱुत्तु निण्ड्र अडि;

तॆय्वप् पुनऱ्‌-कॆडिल नाडन् अडि;

.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.

(* For interpretation : नाम् तॊऴुदु एत्ति, नॆय् आट्टुम् अडि)


पाडल् ऎण् : 4

अरुम्बित्त सॆञ्ञायिऱु एय्क्कुम् अडि;

.. अऴगु ऎऴुदल्-आगा अरुट्-चेवडि;

सुरुम्बित्त, वण्डिनङ्गळ् सूऴ्न्द, अडि;

.. सोमनैयुम् कालनैयुम् काय्न्द अडि;

पॆरुम्-पित्तर् कूडिप् पिदट्रुम् अडि;

.. पिऴैत्तार् पिऴैप्पु अऱिय वल्ल अडि;

तिरुन्दु-नीर्त् तॆन्-कॆडिल नाडन् अडि;

.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.


पाडल् ऎण् : 5

ऒरु-कालत्तु ऒण्ड्रु-आगि निण्ड्र अडि;

.. ऊऴिदोऱु ऊऴि उयर्न्द अडि;

पॊरु-कऴलुम् पल्-सिलम्बुम् आर्क्कुम् अडि;

.. पुगऴ्वार् पुगऴ्-तगैय वल्ल अडि;

इरुनिलत्तार् इन्बुट्रु अङ्गु एत्तुम् अडि;

.. इन्बुट्रार् इट्ट पू एऱुम् अडि;

तिरुवदिगैत् तॆन्-कॆडिल नाडन् अडि;

.. तिरुवीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.


पाडल् ऎण् : 6

तिरुमगट्कुच् चॆन्दामरै आम् अडि;

.. सिऱन्दवर्क्कुत् तेनाय् विळैक्कुम् अडि;

पॊरुळवर्क्कुप् पॊन्नुरैयाय् निण्ड्र अडि;

.. पुगऴ्वार् पुगऴ् तगैय वल्ल अडि;

उरुविरण्डुम् ऒण्ड्रोडु-ऒण्ड्रु ऒव्वा अडि;

.. उरुवॆण्ड्रु उणरप्-पडाद अडि;

तिरुवदिगैत् तॆन्-कॆडिल नाडन् अडि;

.. तिरुवीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.


पाडल् ऎण् : 7

उरैमालै-ऎल्लाम् उडैय अडि;

.. उरैयाल् उणरप्पडाद अडि;

वरैमादै वाडामै वैक्कुम् अडि;

.. वानवर्गळ् ताम् वणङ्गि वाऴ्त्तुम् अडि;

अरै-मात्तिरैयिल् अडङ्गुम् अडि;

.. अगलम् अळक्किऱ्‌पार् इल्ला अडि;

करै-माङ्गलिक्-कॆडिल नाडन् अडि;

.. कमऴ् वीरट्टानक् कबालि अडि.


पाडल् ऎण् : 8

नऱुमलराय् नाऱुम् मलर्च्-चेवडि;

.. नडुवाय् उलग-नाडु आय अडि; *

सॆऱि-कदिरुम् तिङ्गळुमाय् निण्ड्र अडि;

.. तीत्-तिरळाय् उळ्ळे तिगऴ्न्द अडि;

मऱु-मदियै मासु कऴुवुम् अडि;

.. मन्दिरमुम् तन्दिरमुम् आय अडि;

सॆऱि-कॆडिल नाडर् पॆरुमान् अडि;

.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.

(* उलग-नाडु = उलगम् + नाडु)


पाडल् ऎण् : 9

अणियनवुम् सेयनवुम् अल्ला अडि;

.. अडियार्गट्कु आरमुदम् आय अडि;

पणिबवर्क्कुप् पाङ्गाग वल्ल अडि;

.. पट्रट्रार् पट्रुम् पवळ अडि;

मणि-अडि; पॊन्-अडि; माण्बाम् अडि;

.. मरुन्दाय्प् पिणि-तीर्क्क वल्ल अडि;

तणि-पाडु तण्-कॆडिल नाडन् अडि;

.. तगै-सार् वीरट्टत्-तलैवन् अडि.


पाडल् ऎण् : 10

अन्दामरैप्-पोदु अलर्न्द अडि;

.. अरक्कनैयुम् आट्रल् अऴित्त अडि;

मुन्दागि मुन्ने मुळैत्त अडि;

.. मुऴङ्गु-अऴलाय् नीण्ड ऎम् मूर्त्ति अडि;

पन्दाडु मॆल्-विरलाळ् पागन् अडि;

.. पवळत् तड-वरैये पोल्वान् अडि;

वॆन्दार् सुडलै-नीऱु आडुम् अडि;

.. वीरट्टम् कादल् विमलन् अडि.

=============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai

# 1409 - పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 144

అరి-అయనుక్కు అరియానై, అడియవరుక్కు ఎళియానై,

విరి-పునల్-సూఴ్ తిరువదిగై వీరట్టానత్తు అముదైత్,

తెరివు-అరియ పెరుందగైమైత్ తిరునావుక్కరసు మనం

పరివు-ఉఱు సెందమిఴ్ప్-పాట్టుప్ పల పాడిప్ పణిసెయుం నాళ్,


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.6 – తిరువదిగై - "తిరువడిత్ తిరుత్తాండగం"


పాడల్ ఎణ్ : 1

అరవణైయాన్ సిందిత్తు అరట్రుం అడి;

.. అరుమఱైయాన్ సెన్నిక్కు అణి ఆం అడి;

సరవణత్తాన్ కైతొఴుదు సారుం అడి;

.. సార్న్దార్గట్కు-ఎల్లాం సరణ్ ఆం అడి;

పరవువార్ పావం పఱైక్కుం అడి;

.. పదినెణ్-గణంగళుం పాడుం అడి;

తిరై విరవు తెన్-కెడిల నాడన్ అడి;

.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.


పాడల్ ఎణ్ : 2

కొడు-వినైయార్ ఎండ్రుం కుఱుగా అడి;

.. కుఱైందు-అడైందార్ ఆఴామైక్ కాక్కుం అడి;

పడు-ముఴవం పాణి పయిట్రుం అడి;

.. పదైత్తెఴుంద వెంగూట్రైప్ పాయ్న్ద అడి;

కడు-మురణ్-ఏఱు ఊర్న్దాన్ కఴఱ్చేవడి;

.. కడల్-వైయం కాప్పాన్ కరుదుం అడి;

నెడు-మదియం కణ్ణి అణిందాన్ అడి;

.. నిఱై-కెడిల వీరట్టం నీంగా అడి.


పాడల్ ఎణ్ : 3

వైదు-ఎఴువార్ కామం పొయ్ పోగా అడి;

.. వంజ-వలైప్పాడు ఒండ్రు-ఇల్లా అడి;

కైదొఴుదు నాం ఏత్తిక్ కాణుం అడి;

.. కణక్కు-వఴక్కైక్ కడంద అడి;

నెయ్, తొఴుదు నాం ఏత్తి, ఆట్టుం అడి; *

.. నీళ్-విసుంబై ఊడఱుత్తు నిండ్ర అడి;

తెయ్వప్ పునఱ్-కెడిల నాడన్ అడి;

.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.

(* For interpretation : నాం తొఴుదు ఏత్తి, నెయ్ ఆట్టుం అడి)


పాడల్ ఎణ్ : 4

అరుంబిత్త సెఞ్ఞాయిఱు ఏయ్క్కుం అడి;

.. అఴగు ఎఴుదల్-ఆగా అరుట్-చేవడి;

సురుంబిత్త, వండినంగళ్ సూఴ్న్ద, అడి;

.. సోమనైయుం కాలనైయుం కాయ్న్ద అడి;

పెరుం-పిత్తర్ కూడిప్ పిదట్రుం అడి;

.. పిఴైత్తార్ పిఴైప్పు అఱియ వల్ల అడి;

తిరుందు-నీర్త్ తెన్-కెడిల నాడన్ అడి;

.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.


పాడల్ ఎణ్ : 5

ఒరు-కాలత్తు ఒండ్రు-ఆగి నిండ్ర అడి;

.. ఊఴిదోఱు ఊఴి ఉయర్న్ద అడి;

పొరు-కఴలుం పల్-సిలంబుం ఆర్క్కుం అడి;

.. పుగఴ్వార్ పుగఴ్-తగైయ వల్ల అడి;

ఇరునిలత్తార్ ఇన్బుట్రు అంగు ఏత్తుం అడి;

.. ఇన్బుట్రార్ ఇట్ట పూ ఏఱుం అడి;

తిరువదిగైత్ తెన్-కెడిల నాడన్ అడి;

.. తిరువీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.


పాడల్ ఎణ్ : 6

తిరుమగట్కుచ్ చెందామరై ఆం అడి;

.. సిఱందవర్క్కుత్ తేనాయ్ విళైక్కుం అడి;

పొరుళవర్క్కుప్ పొన్నురైయాయ్ నిండ్ర అడి;

.. పుగఴ్వార్ పుగఴ్ తగైయ వల్ల అడి;

ఉరువిరండుం ఒండ్రోడు-ఒండ్రు ఒవ్వా అడి;

.. ఉరువెండ్రు ఉణరప్-పడాద అడి;

తిరువదిగైత్ తెన్-కెడిల నాడన్ అడి;

.. తిరువీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.


పాడల్ ఎణ్ : 7

ఉరైమాలై-ఎల్లాం ఉడైయ అడి;

.. ఉరైయాల్ ఉణరప్పడాద అడి;

వరైమాదై వాడామై వైక్కుం అడి;

.. వానవర్గళ్ తాం వణంగి వాఴ్త్తుం అడి;

అరై-మాత్తిరైయిల్ అడంగుం అడి;

.. అగలం అళక్కిఱ్పార్ ఇల్లా అడి;

కరై-మాంగలిక్-కెడిల నాడన్ అడి;

.. కమఴ్ వీరట్టానక్ కబాలి అడి.


పాడల్ ఎణ్ : 8

నఱుమలరాయ్ నాఱుం మలర్చ్-చేవడి;

.. నడువాయ్ ఉలగ-నాడు ఆయ అడి; *

సెఱి-కదిరుం తింగళుమాయ్ నిండ్ర అడి;

.. తీత్-తిరళాయ్ ఉళ్ళే తిగఴ్న్ద అడి;

మఱు-మదియై మాసు కఴువుం అడి;

.. మందిరముం తందిరముం ఆయ అడి;

సెఱి-కెడిల నాడర్ పెరుమాన్ అడి;

.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.

(* ఉలగ-నాడు = ఉలగం + నాడు)


పాడల్ ఎణ్ : 9

అణియనవుం సేయనవుం అల్లా అడి;

.. అడియార్గట్కు ఆరముదం ఆయ అడి;

పణిబవర్క్కుప్ పాంగాగ వల్ల అడి;

.. పట్రట్రార్ పట్రుం పవళ అడి;

మణి-అడి; పొన్-అడి; మాణ్బాం అడి;

.. మరుందాయ్ప్ పిణి-తీర్క్క వల్ల అడి;

తణి-పాడు తణ్-కెడిల నాడన్ అడి;

.. తగై-సార్ వీరట్టత్-తలైవన్ అడి.


పాడల్ ఎణ్ : 10

అందామరైప్-పోదు అలర్న్ద అడి;

.. అరక్కనైయుం ఆట్రల్ అఴిత్త అడి;

ముందాగి మున్నే ముళైత్త అడి;

.. ముఴంగు-అఴలాయ్ నీండ ఎం మూర్త్తి అడి;

పందాడు మెల్-విరలాళ్ పాగన్ అడి;

.. పవళత్ తడ-వరైయే పోల్వాన్ అడి;

వెందార్ సుడలై-నీఱు ఆడుం అడి;

.. వీరట్టం కాదల్ విమలన్ అడి.

=============================