179) 11.6 - பொன்வண்ணத்தந்தாதி - 1-10 - ponvaNNaththandhAdhi
சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி - 11.6 - (songs 1-10)
sēramān perumāḷ nāyanār - ponvaṇṇattandādi - 11.6 - (songs 1-10)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1hhVXFmhTNGHcOXMi4J1R8qh_XG1mVw-0/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
Part-2:
Part-3:
Part-4:
***
V.
Subramanian
================
Verses in Tamil (traditional seer split & word split), English, Devanagari, Telugu scripts.
சேரமான்பெருமாள் நாயனார் - 11.6 - பொன்வண்ணத்தந்தாதி - 01-10
பதிக வரலாறு : சேரமான்பெருமாள் நாயனாருக்கு ஈசன் சுந்தரரின் பெருமையை உணர்த்தினான். சுந்தரரைக் காண விரும்பிய சேரமான்பெருமாள் நாயனார் தில்லையை அடைந்து நடராஜப் பெருமானைத் தரிசித்து இப்பாடல்களைப் பாடினார். பின்னர்த் தில்லையிலிருந்து கிளம்பித் திருவாரூருக்குச் சென்றார். (திருமுறை 12 - கழறிற்றறிவார் புராணம் 12.37.41 - 45, 55 - 57, 60).
நூலின் பெயர்க்-காரணம்:
இது, "பொன்வண்ணம்" என்று தொடங்கும் அந்தாதியாக இருப்பதால் "பொன்வண்ணத்து-அந்தாதி" என்ற பெயர் பெற்றது. ("பொன்வண்ணமே" என்றே முடிந்து மண்டலித்துவரும் அந்தாதி).
அந்தாதி - ஒரு பாடலின் கடைசியில் உள்ள எழுத்தோ சொல்லோ சொற்றொடரோ அடுத்த பாடலின் தொடக்கத்தில் அமைந்து வரும் பல பாடல்களால் ஆன நூலை அந்தாதி என்பர்.
மண்டலித்தல் - ஓர் அந்தாதியில் கடைசிப்பாடலின் இறுதியும் முதற்பாடலின் தொடக்கமும் ஒன்றிவருதல்;
இப்பாடல்களின் செய்யுள் அமைப்பு:
கட்டளைக் கலித்துறை.
நான்கு அடிகள். அடிகள்தோறும் 5 சீர்கள்.
ஒவ்வோர் அடியினுள்ளும் சீர்களிடையே வெண்டளை.
அடிகளிடையே வெண்டளைக் கட்டுப்பாடு இல்லை.
அடிகளில் சீர்கள்-1-4 - மா / விளம் / மாங்காய் அமைப்புடையன. விளங்காய்ச்சீர்கள் வாரா.
அடிகளில் சீர்-5 - விளங்காய்ச்சீர் மட்டுமே வரும்.
ஈற்றடியின் முடிவில் ஏகாரம் வரும்.
இந்தக் கட்டுப்பாடுகளோடு அமைந்தால், அடிகள் நேரசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்தும் நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்தும் தானே அமையும்.
இந்தச் செய்யுள்-அமைப்பில் திருமுறைகளில் பல பதிகங்கள் உள்ளன:
அப்பர் தேவாரத்தில் இத்தகைய அமைப்பு உள்ள பதிகங்கள் "திருவிருத்தம்" என்று சுட்டப்பெறும். அப்பர் தேவாரம் - 4.80 - 4.113 - (திருவிருத்தம்)
சம்பந்தர் தேவாரம் - 1.116 - 1.117 - (பண் - வியாழக்குறிஞ்சி)
சுந்தரர் தேவாரம் - 7.17 - 7.19 - (பண் - நட்டராகம்)
திருவாசகம் - 8.5 நீத்தல் விண்ணப்பம் & 8.6 திருச்சதகத்தில் ஒரு பகுதி.
திருக்கோவையார்
11-ஆம் திருமுறையில் பல பிரபந்தங்களில் காணலாம் - திருவிரட்டைமணிமாலை, திருத்தொண்டர் திருவந்தாதி, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, முதலியன.
==========
Padhigam background - Periya Puranam
Seraman Perumal nayanar does not hear Siva's anklets' sound after his puja
# 3788 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 41
வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பி னர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினா ராடற் சிலம்பி னொலிமுன்போன்
மானப் பூசை முடிவின்கட் கேளா தொழிய மதிமயங்கி,
Seraman Perumal nayanar hears Siva's anklets' sound just as he was about to kill himself
# 3789 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 42
பூசை கடிது முடித் "தடியே னென்னோ பிழைத்த?" தெனப்பொருமி
"ஆசை யுடம்பான் மற்றினிவே றடையு மின்ப மியா?" தென்று
தேசின் விளங்கு முடைவாளை யுருவித் திருமார் பினினாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பி னோசை மிகவு மிசைப்பித்தார்.
Seraman Perumal seeks to know the reason for the delay
# 3790 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 43
ஆடற் சிலம்பி னொலிகேளா வுடைவா ளகற்றி யங்கைமலர்
கூடத் தலைமேற் குவித்தருளிக் கொண்டு விழுந்து தொழுதெழுந்து
நீடப் பரவி மொழிகின்றார் "நெடுமால் பிரம னருமறைமுன்
தேடற் கரியாய் திருவருள்முன் செய்யா தொழிந்த தென்"னென்றார்.
Siva tells that He was listening to Sundarar's singing in Chidambaram and hence the delay
# 3791 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 44
என்ற பொழுதி னிறைவர்தா மெதிர்நின் றருளா தெழுமொலியான்
"மன்றி னிடைநங் கூத்தாடல் வந்து வணங்கி வன்றொண்டன்
ஒன்று முணர்வா னமைப்போற்றி யுரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோ" மென்றா ரவரை நினைப்பிப்பார்.
Seraman Perumal embarks on his visit to Chidambaram and meet Sundarar
# 3792 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 45
"என்னே! யடியார்க் கிவரருளுங் கருணை யிருந்த வா"றென்று
பொன்னேர் சடையார் திருநடஞ்செய் புலியூர்ப் பொன்னம் பலமிறைஞ்சித்
தன்னே ரில்லா வன்றொண்டர் தமையுங் காண்ப" னெனவிரும்பி
நன்னீர் நாட்டுச் செலநயந்தார் நாமச் சேரர் கோமானார்.
Seraman Perumal worhsips Nataraja in Chidambaram
# 3802 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 55
அளவி லின்பப் பெருங்கூத்த ராட வெடுத்த கழல்காட்ட
உளமும் புலமு மொருவழிச்சென் றுருகப் போற்றி யுய்கின்றார்
களனில் விடம்வைத் தளித்தவமு தன்றி மன்றிற் கழல்வைத்து
வளருந் திருக்கூத் தமுதுலகுக் களித்த கருணை வழுத்தினார்.
Seraman Perumal sings "pon vaNNaththu andhAdhi"
# 3803 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 56
ஆரா வாசை யானந்தக் கடலுட் டிளைத்தே யமர்ந்தருளாற்
சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருவந் தாதி திருப்படிக்கீழ்ப்
பாரா தரிக்க வெடுத்தேத்திப் பணிந்தார், பருவமழை பொழியுங்
காரா னிகர்க்க வரியகொடைக் கையார் கழறிற் றறிவார்தாம்.
Seraman Perumal hears Siva's anklets' sound
# 3804 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 57
தம்பி ரானார்க் கெதிர்நின்று தமிழ்ச்சொன் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடமாடு மொருவ ரதற்குப் பரிசிலெனச்
செம்பொன் மணிமன் றினிலெடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட வெழுந்தவொலி தாமு மெதிரே கேட்பித்தார்.
Seraman Perumal starts on his journey to Thiruvarur
# 3807 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 60
ஆடும் பெருமான் பாடல்கேட் டருளித் தாழ்த்த படிதமக்குக்
கூடும் பரிசான் முன்பருளிச் செய்த நாவ லூர்க்கோவை
நீடும் பெருங்கா தலிற்காண நிறைந்த நினைவு நிரம்பமால்
தேடும் பாத ரருளினாற் றிருவா ரூர்மேற் செலவெழுந்தார்.
சேரமான்பெருமாள் நாயனார் - 11.6 - பொன்வண்ணத்தந்தாதி - 01-10
(கட்டளைக் கலித்துறை - meter)
பாடல் எண் : 1
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
பாடல் எண் : 2
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே.
பாடல் எண் : 3
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண் கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம்இவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின் றாடும் பரமனையே.
(* For interpretation - Lines 3 & 4 = பெண் இவள் பேதை-நெஞ்சம் பண்கள் அங்கம் இசை பாடநின்று ஆடும் பரமனையே பேதுறும் என்பதோர் களங்கம்.)
பாடல் எண் : 4
பரமனை யேபலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யேசிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்
சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.
(* For interpretation, move "முக்கண்ணுடை மாதவன்" to the beginning)
பாடல் எண் : 5
தவனே உலகுக்குத் தானே முதல்தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும் பெறுவரிப் பாரிடமே.
பாடல் எண் : 6
இட(ம்)மால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பாலொண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வல(ம்)மான்
இட(ம்)மால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே.
(* For interpretation, move "எங்கள் கூத்தனுக்கு" to the beginning)
பாடல் எண் : 7
கூத்துக் கொலாமிவர் ஆடித் திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக் கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்டதிண் டைச்சடை உத்தமரே.
(* For interpretation, move "இண்டைச்சடை உத்தமர்" to the beginning)
பாடல் எண் : 8
உத்தம ராயடி யாருல காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம் பதிநலஞ் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன் ஆடித் திரிதவரே.
பாடல் எண் : 9
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளுந் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே.
பாடல் எண் : 10
பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொள்அப்பனை அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீயென் தனிநெஞ்சமே.
=============================
Word separated version:
Padhigam background - Periya Puranam
Seraman Perumal nayanar does not hear Siva's anklets' sound after his puja
# 3788 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 41
வானக் கங்கைநதி பொதிந்த மல்கு-சடையார் வழிபாட்டுத்
தூ-நற்-சிறப்பின் அர்ச்சனையாம் தொண்டு புரிவார்-தமக்கு ஒருநாள்
தேன் நக்கு அலர்ந்த கொன்றையினார் ஆடற்-சிலம்பின் ஒலி முன்போல்
மானப்-பூசை முடிவின்கண் கேளாது-ஒழிய, மதிமயங்கி,
Seraman Perumal nayanar hears Siva's anklets' sound just as he was about to kill himself
# 3789 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 42
பூசை கடிது முடித்து, "அடியேன் என்னோ பிழைத்தது?" எனப் பொருமி,
"ஆசை-உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது?" என்று,
தேசின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட,
ஈசர் விரைந்து திருச்சிலம்பின்-ஓசை மிகவும் இசைப்பித்தார்.
Seraman Perumal seeks to know the reason for the delay
# 3790 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 43
ஆடற்-சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி, அங்கைமலர்
கூடத் தலைமேல் குவித்தருளிக்கொண்டு, விழுந்து தொழுதெழுந்து,
நீடப் பரவி மொழிகின்றார், "நெடுமால் பிரமன் அருமறை முன்
தேடற்கு அரியாய்! திருவருள் முன் செய்யாது-ஒழிந்தது என்?" என்றார்.
Siva tells that He was listening to Sundarar's singing in Chidambaram and hence the delay
# 3791 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 44
என்ற பொழுதின் இறைவர்தாம் எதிர்-நின்று-அருளாது, எழும் ஒலியால்,
"மன்றினிடை நம் கூத்தாடல் வந்து வணங்கி வன்-தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை-சேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்" என்றார் அவரை நினைப்பிப்பார்.
Seraman Perumal embarks on his visit to Chidambaram and meet Sundarar
# 3792 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 45
"என்னே! அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு" என்று,
பொன் நேர் சடையார் திருநடம்-செய் புலியூர்ப் பொன்னம்பலம் இறைஞ்சித்,
தன் நேர் இல்லா வன்-தொண்டர்-தமையும் காண்பன்" என விரும்பி,
நன்னீர் நாட்டுச் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார்.
Seraman Perumal worhsips Nataraja in Chidambaram
# 3802 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 55
அளவு-இல் இன்பப் பெருங்கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட,
உளமும் புலமும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார்,
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி, மன்றில் கழல் வைத்து
வளரும் திருக்கூத்து-அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்.
Seraman Perumal sings "pon vaNNaththu andhAdhi"
# 3803 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 56
ஆரா ஆசை ஆனந்தக்-கடலுள் திளைத்தே அமர்ந்து, அருளால்
சீர் ஆர் வண்ணப் பொன்வண்ணத் திருவந்தாதி திருப்படிக்கீழ்ப்
பார் ஆதரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார், பருவமழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்-கையார் கழறிற்றறிவார்தாம்.
Seraman Perumal hears Siva's anklets' sound
# 3804 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 57
தம்பிரானார்க்கு எதிர்-நின்று தமிழ்ச்-சொல்மாலை கேட்பிக்க,
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்,
செம்பொன் மணிமன்றினில் எடுத்த செய்ய பாதத்-திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த ஒலி தாமும் எதிரே கேட்பித்தார்.
Seraman Perumal starts on his journey to Thiruvarur
# 3807 - பெரியபுராணம் - கழறிற்றறிவார் புராணம் - 60
ஆடும் பெருமான் பாடல் கேட்டருளித் தாழ்த்தபடி தமக்குக்
கூடும் பரிசால் முன்பு அருளிச்செய்த நாவலூர்க்கோவை
நீடும் பெருங்காதலில் காண நிறைந்த நினைவு நிரம்ப, மால்
தேடும் பாதர் அருளினால் திருவாரூர்மேல் செல எழுந்தார்.
சேரமான்பெருமாள் நாயனார் - 11.6 - பொன்வண்ணத்தந்தாதி - 01-10
(கட்டளைக் கலித்துறை - meter)
பாடல் எண் : 1
பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி; பொலிந்து இலங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை; வெள்ளிக்குன்றம்-
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை; தன்னைக் கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
பாடல் எண் : 2
ஈசனைக் காணப் பலிகொடு செல்ல, "எற்றே இவள் ஓர்
பேயனைக் காமுறு பிச்சிகொலாம்" என்று பேதையர்முன்
தாய் எனை ஈர்ப்பத், தமியேன் தளர, அத்-தாழ்சடையோன்
"வா எனைப் புல்ல" என்றான்; இமை விண்டன வாட்கண்களே.
பாடல் எண் : 3
கண்கள் அங்கு அம் செய்யக், கைவளை சோரக், கலையும் செல்ல,
ஒண்-களம் கண் நுதல் வேர்ப்ப, ஒண்-கொன்றையந்தார்-உருவப்
பெண் களங்கம் இவள் பேதுறும் என்பதோர் பேதை-நெஞ்சம்
பண்களங்கம்இசை பாடநின்று ஆடும் பரமனையே.
(* For interpretation - Lines 3 & 4 = பெண் இவள் பேதை-நெஞ்சம் பண்கள் அங்கம் இசை பாடநின்று ஆடும் பரமனையே பேதுறும் என்பதோர் களங்கம்.)
பாடல் எண் : 4
பர-மனையே பலி தேர்ந்து, நஞ்சு உண்டது; பன்மலர் சேர்
பிரமனையே சிரம் கொண்டும், கொடுப்பது பேரருளாம்;
சர-மனையே உடம்பு அட்டும், உடம்பொடு மாது இடம் ஆம்;
வர-மனையே கிளை ஆகும் முக்கண்ணுடை மாதவனே.
(* For interpretation, move "முக்கண்ணுடை மாதவன்" to the beginning)
பாடல் எண் : 5
"தவனே; உலகுக்குத் தானே முதல்; தான் படைத்த-எல்லாம்
சிவனே முழுதும்" என்பார் சிவலோகம் பெறுவர்; "செய்ய
அவனே அடல்விடை ஊர்தி; கடலிடை நஞ்சம் உண்ட
பவனே" எனச் சொல்லுவாரும் பெறுவர் இப்-பாரிடமே.
பாடல் எண் : 6
இட(ம்) மால், வலம் தான்; இடப்பால் துழாய், வலப்பால் ஒண்-கொன்றை
வடமால்; இடம் துகில், தோல் வலம்; ஆழி இடம், வல(ம்) மான்;
இட(ம்) மால்-கரிதால், வலம் சேது இவனுக்கு; எழில்நலம் சேர்
குடமால் இடம், வலம் கொக்கரையாம்; எங்கள் கூத்தனுக்கே.
(* For interpretation, move "எங்கள் கூத்தனுக்கு" to the beginning)
பாடல் எண் : 7
கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது; கோல்வளைகள்
பாத்துக் கொலாம் பலி-தேர்வது; மேனி பவளம் கொலாம்;
ஏத்துக் கொலாம் இவர் ஆதரிக்கின்றது இமையவர்தம்;
ஓத்துக் கொலாம் இவர் கண்டது; இண்டைச்சடை உத்தமரே.
(* For interpretation, move "இண்டைச்சடை உத்தமர்" to the beginning)
பாடல் எண் : 8
உத்தமராய் அடியார் உலகு ஆளத், தமக்கு உரிய
மத்தம் அரா மதி மாடு அம் பதி, நலம் சீர்மை குன்றா
எத்-தமராயும் பணிகொள வல்ல இறைவர், வந்து என்
சித்தமராய் அகலாது உடன் ஆடித் திரிதவரே.
(* This is my interpretation. Dharmapuram Adheenam urai intreprets line-2 differently)
பாடல் எண் : 9
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும்; திரிதரினும்
அரிது அவர் தன்மை; அறிவிப்பதாயினும், ஆழிநஞ்சு ஏய்
கரிது அவர் கண்டம்; வெளிது அவர் சாந்தம்; கண் மூன்றொடு, ஒன்றாம்
பரி-தவர்; தாமே அருள்செய்து கொள்வர் தம் பல்-பணியே.
பாடல் எண் : 10
பணி பதம்; பாடு இசை; ஆடு இசையாகப்; பனிமலரால்
அணி, பதங்கன் பற்-கொள் அப்பனை; அத்-தவற்கே அடிமை
துணி; பதம் காமுறு; தோலொடு நீறு உடல் தூர்த்து நல்ல
தணி பதம் காட்டிடும்; சஞ்சலம் நீ என் தனி-நெஞ்சமே.
(* line-2 - another possibility:
பனிமலரால் அணி; பதங்கன் பற்-கொள் அப்பன், ஐ, அத்-தவற்கே அடிமை துணி;)
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Seraman Perumal nayanar does not hear Siva's anklets' sound after his puja
# 3788 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 41
vānak gaṅgainadi podinda malgu-saḍaiyār vaḻibāṭṭut
tū-naṟ-siṟappin arccanaiyām toṇḍu purivār-tamakku orunāḷ
tēn nakku alarnda koṇḍraiyinār āḍaṟ-silambin oli munbōl
mānap-pūsai muḍivingaṇ kēḷādu-oḻiya, madimayaṅgi,
Seraman Perumal nayanar hears Siva's anklets' sound just as he was about to kill himself
# 3789 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 42
pūsai kaḍidu muḍittu, "aḍiyēn ennō piḻaittadu?" enap porumi,
"āsai-uḍambāl maṭru ini vēṟu aḍaiyum inbam yādu?" eṇḍru,
tēsin viḷaṅgum uḍaivāḷai uruvit tirumārbinil nāṭṭa,
īsar viraindu tiruccilambin-ōsai migavum isaippittār.
Seraman Perumal seeks to know the reason for the delay
# 3790 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 43
āḍaṟ-silambin oli kēḷā uḍaivāḷ agaṭri, aṅgaimalar
kūḍat talaimēl kuvittaruḷikkoṇḍu, viḻundu toḻudeḻundu,
nīḍap paravi moḻigiṇḍrār, "neḍumāl piraman arumaṟai mun
tēḍaṟku ariyāy! tiruvaruḷ mun seyyādu-oḻindadu en?" eṇḍrār.
Siva tells that He was listening to Sundarar's singing in Chidambaram and hence the delay
# 3791 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 44
eṇḍra poḻudin iṟaivardām edir-niṇḍru-aruḷādu, eḻum oliyāl,
"maṇḍriniḍai nam kūttāḍal vandu vaṇaṅgi van-toṇḍan
oṇḍrum uṇarvāl namaip pōṭri urai-sēr padigam pāḍudalāl
niṇḍru kēṭṭu varat tāḻttōm" eṇḍrār avarai ninaippippār.
Seraman Perumal embarks on his visit to Chidambaram and meet Sundarar
# 3792 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 45
"ennē! aḍiyārkku ivar aruḷum karuṇai irundavāṟu" eṇḍru,
pon nēr saḍaiyār tirunaḍam-sey puliyūrp ponnambalam iṟaiñjit,
tan nēr illā van-toṇḍar-tamaiyum kāṇban" ena virumbi,
nannīr nāṭṭuc cela nayandār nāmac cērar kōmānār.
Seraman Perumal worhsips Nataraja in Chidambaram
# 3802 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 55
aḷavu-il inbap peruṅgūttar āḍa eḍutta kaḻal kāṭṭa,
uḷamum pulamum oruvaḻic ceṇḍru urugap pōṭri uygiṇḍrār,
kaḷanil viḍam vaittu aḷitta amudu aṇḍri, maṇḍril kaḻal vaittu
vaḷarum tirukkūttu-amudu ulagukku aḷitta karuṇai vaḻuttinār.
Seraman Perumal sings "pon vaNNaththu andhAdhi"
# 3803 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 56
ārā āsai ānandak-kaḍaluḷ tiḷaittē amarndu, aruḷāl
sīr ār vaṇṇap ponvaṇṇat tiruvandādi tiruppaḍikkīḻp
pār ādarikka eḍuttu ēttip paṇindār, paruvamaḻai poḻiyum
kārāl nigarkka ariya koḍaik-kaiyār kaḻaṟiṭraṟivārdām.
Seraman Perumal hears Siva's anklets' sound
# 3804 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 57
tambirānārkku edir-niṇḍru tamiḻc-colmālai kēṭpikka,
umbar vāḻa naḍam āḍum oruvar adaṟkup parisil enac,
cembon maṇimaṇḍrinil eḍutta seyya pādat-tiruccilambin
imbar nīḍa eḻunda oli tāmum edirē kēṭpittār.
Seraman Perumal starts on his journey to Thiruvarur
# 3807 - periyapurāṇam - kaḻaṟiṭraṟivār purāṇam - 60
āḍum perumān pāḍal kēṭṭaruḷit tāḻttabaḍi tamakkuk
kūḍum parisāl munbu aruḷicceyda nāvalūrkkōvai
nīḍum peruṅgādalil kāṇa niṟainda ninaivu niramba, māl
tēḍum pādar aruḷināl tiruvārūrmēl sela eḻundār.
sēramān perumāḷ nāyanār - 11.6 - ponvaṇṇattandādi - 01-10
(kaṭṭaḷaik kalittuṟai - meter)
pāḍal eṇ : 1
pon vaṇṇam evvaṇṇam avvaṇṇam mēni; polindu ilaṅgum
min vaṇṇam evvaṇṇam avvaṇṇam vīḻsaḍai; veḷḷikkuṇḍram-
tan vaṇṇam evvaṇṇam avvaṇṇam mālviḍai; tannaik kaṇḍa
en vaṇṇam evvaṇṇam avvaṇṇam āgiya īsanukkē.
pāḍal eṇ : 2
īsanaik kāṇap paligoḍu sella, "eṭrē ivaḷ ōr
pēyanaik kāmuṟu piccigolām" eṇḍru pēdaiyarmun
tāy enai īrppat, tamiyēn taḷara, at-tāḻsaḍaiyōn
"vā enaip pulla" eṇḍrān; imai viṇḍana vāṭkaṇgaḷē.
pāḍal eṇ : 3
kaṇgaḷ aṅgu am seyyak, kaivaḷai sōrak, kalaiyum sella,
oṇ-kaḷam kaṇ nudal vērppa, oṇ-koṇḍraiyandār-uruvap
peṇ kaḷaṅgam ivaḷ pēduṟum enbadōr pēdai-neñjam
paṇgaḷaṅgamisai pāḍaniṇḍru āḍum paramanaiyē.
(* For interpretation - Lines 3 & 4 = peṇ ivaḷ pēdai-neñjam paṇgaḷ aṅgam isai pāḍaniṇḍru āḍum paramanaiyē pēduṟum enbadōr kaḷaṅgam.)
pāḍal eṇ : 4
para-manaiyē bali tērndu, nañju uṇḍadu; panmalar sēr
piramanaiyē siram koṇḍum, koḍuppadu pēraruḷām;
sara-manaiyē uḍambu aṭṭum, uḍamboḍu mādu iḍam ām;
vara-manaiyē kiḷai āgum mukkaṇṇuḍai mādavanē.
(* For interpretation, move "mukkaṇṇuḍai mādavan" to the beginning)
pāḍal eṇ : 5
"tavanē; ulagukkut tānē mudal; tān paḍaitta-ellām
sivanē muḻudum" enbār sivalōgam peṟuvar; "seyya
avanē aḍalviḍai ūrdi; kaḍaliḍai nañjam uṇḍa
bavanē" enac colluvārum peṟuvar ip-pāriḍamē.
pāḍal eṇ : 6
iḍa(m) māl, valam tān; iḍappāl tuḻāy, valappāl oṇ-koṇḍrai
vaḍamāl; iḍam tugil, tōl valam; āḻi iḍam, vala(m) mān;
iḍa(m) māl-karidāl, valam sēdu ivanukku; eḻilnalam sēr
kuḍamāl iḍam, valam kokkaraiyām; eṅgaḷ kūttanukkē.
(* For interpretation, move "eṅgaḷ kūttanukku" to the beginning)
pāḍal eṇ : 7
kūttuk kolām ivar āḍit tirivadu; kōlvaḷaigaḷ
pāttuk kolām pali-tērvadu; mēni pavaḷam kolām;
ēttuk kolām ivar ādarikkiṇḍradu imaiyavardam;
ōttuk kolām ivar kaṇḍadu; iṇḍaiccaḍai uttamarē.
(* For interpretation, move "iṇḍaiccaḍai uttamar" to the beginning)
pāḍal eṇ : 8
uttamarāy aḍiyār ulagu āḷat, tamakku uriya
mattam arā madi māḍu am padi, nalam sīrmai kuṇḍrā
et-tamarāyum paṇigoḷa valla iṟaivar, vandu en
sittamarāy agalādu uḍan āḍit tiridavarē.
(* This is my interpretation. Dharmapuram Adheenam urai intreprets line-2 differently)
pāḍal eṇ : 9
tiridavar kaṇṇuḷḷum uḷḷattin uḷḷum; tiridarinum
aridu avar tanmai; aṟivippadāyinum, āḻinañju ēy
karidu avar kaṇḍam; veḷidu avar sāndam; kaṇ mūṇḍroḍu, oṇḍrām
pari-tavar; tāmē aruḷseydu koḷvar tam pal-paṇiyē.
pāḍal eṇ : 10
paṇi padam; pāḍu isai; āḍu isaiyāgap; panimalarāl
aṇi, padaṅgan paṟ-koḷ appanai; at-tavaṟkē aḍimai
tuṇi; padam kāmuṟu; tōloḍu nīṟu uḍal tūrttu nalla
taṇi padam kāṭṭiḍum; sañjalam nī en tani-neñjamē.
(* line-2 - another possibility:
panimalarāl aṇi; padaṅgan paṟ-koḷ appan, ai, at-tavaṟkē aḍimai tuṇi;)
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Seraman Perumal nayanar does not hear Siva's anklets' sound after his puja
# 3788 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 41
वानक् गङ्गैनदि पॊदिन्द मल्गु-सडैयार् वऴिबाट्टुत्
तू-नऱ्-सिऱप्पिन् अर्च्चनैयाम् तॊण्डु पुरिवार्-तमक्कु ऒरुनाळ्
तेन् नक्कु अलर्न्द कॊण्ड्रैयिनार् आडऱ्-सिलम्बिन् ऒलि मुन्बोल्
मानप्-पूसै मुडिविन्गण् केळादु-ऒऴिय, मदिमयङ्गि,
Seraman Perumal nayanar hears Siva's anklets' sound just as he was about to kill himself
# 3789 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 42
पूसै कडिदु मुडित्तु, "अडियेन् ऎन्नो पिऴैत्तदु?" ऎनप् पॊरुमि,
"आसै-उडम्बाल् मट्रु इनि वेऱु अडैयुम् इन्बम् यादु?" ऎण्ड्रु,
तेसिन् विळङ्गुम् उडैवाळै उरुवित् तिरुमार्बिनिल् नाट्ट,
ईसर् विरैन्दु तिरुच्चिलम्बिन्-ओसै मिगवुम् इसैप्पित्तार्.
Seraman Perumal seeks to know the reason for the delay
# 3790 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 43
आडऱ्-सिलम्बिन् ऒलि केळा उडैवाळ् अगट्रि, अङ्गैमलर्
कूडत् तलैमेल् कुवित्तरुळिक्कॊण्डु, विऴुन्दु तॊऴुदॆऴुन्दु,
नीडप् परवि मॊऴिगिण्ड्रार्, "नॆडुमाल् पिरमन् अरुमऱै मुन्
तेडऱ्कु अरियाय्! तिरुवरुळ् मुन् सॆय्यादु-ऒऴिन्ददु ऎन्?" ऎण्ड्रार्.
Siva tells that He was listening to Sundarar's singing in Chidambaram and hence the delay
# 3791 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 44
ऎण्ड्र पॊऴुदिन् इऱैवर्दाम् ऎदिर्-निण्ड्रु-अरुळादु, ऎऴुम् ऒलियाल्,
"मण्ड्रिनिडै नम् कूत्ताडल् वन्दु वणङ्गि वन्-तॊण्डन्
ऒण्ड्रुम् उणर्वाल् नमैप् पोट्रि उरै-सेर् पदिगम् पाडुदलाल्
निण्ड्रु केट्टु वरत् ताऴ्त्तोम्" ऎण्ड्रार् अवरै निनैप्पिप्पार्.
Seraman Perumal embarks on his visit to Chidambaram and meet Sundarar
# 3792 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 45
"ऎन्ने! अडियार्क्कु इवर् अरुळुम् करुणै इरुन्दवाऱु" ऎण्ड्रु,
पॊन् नेर् सडैयार् तिरुनडम्-सॆय् पुलियूर्प् पॊन्नम्बलम् इऱैञ्जित्,
तन् नेर् इल्ला वन्-तॊण्डर्-तमैयुम् काण्बन्" ऎन विरुम्बि,
नन्नीर् नाट्टुच् चॆल नयन्दार् नामच् चेरर् कोमानार्.
Seraman Perumal worhsips Nataraja in Chidambaram
# 3802 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 55
अळवु-इल् इन्बप् पॆरुङ्गूत्तर् आड ऎडुत्त कऴल् काट्ट,
उळमुम् पुलमुम् ऒरुवऴिच् चॆण्ड्रु उरुगप् पोट्रि उय्गिण्ड्रार्,
कळनिल् विडम् वैत्तु अळित्त अमुदु अण्ड्रि, मण्ड्रिल् कऴल् वैत्तु
वळरुम् तिरुक्कूत्तु-अमुदु उलगुक्कु अळित्त करुणै वऴुत्तिनार्.
Seraman Perumal sings "pon vaNNaththu andhAdhi"
# 3803 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 56
आरा आसै आनन्दक्-कडलुळ् तिळैत्ते अमर्न्दु, अरुळाल्
सीर् आर् वण्णप् पॊन्वण्णत् तिरुवन्दादि तिरुप्पडिक्कीऴ्प्
पार् आदरिक्क ऎडुत्तु एत्तिप् पणिन्दार्, परुवमऴै पॊऴियुम्
काराल् निगर्क्क अरिय कॊडैक्-कैयार् कऴऱिट्रऱिवार्दाम्.
Seraman Perumal hears Siva's anklets' sound
# 3804 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 57
तम्बिरानार्क्कु ऎदिर्-निण्ड्रु तमिऴ्च्-चॊल्मालै केट्पिक्क,
उम्बर् वाऴ नडम् आडुम् ऒरुवर् अदऱ्कुप् परिसिल् ऎनच्,
चॆम्बॊन् मणिमण्ड्रिनिल् ऎडुत्त सॆय्य पादत्-तिरुच्चिलम्बिन्
इम्बर् नीड ऎऴुन्द ऒलि तामुम् ऎदिरे केट्पित्तार्.
Seraman Perumal starts on his journey to Thiruvarur
# 3807 - पॆरियपुराणम् - कऴऱिट्रऱिवार् पुराणम् - 60
आडुम् पॆरुमान् पाडल् केट्टरुळित् ताऴ्त्तबडि तमक्कुक्
कूडुम् परिसाल् मुन्बु अरुळिच्चॆय्द नावलूर्क्कोवै
नीडुम् पॆरुङ्गादलिल् काण निऱैन्द निनैवु निरम्ब, माल्
तेडुम् पादर् अरुळिनाल् तिरुवारूर्मेल् सॆल ऎऴुन्दार्.
सेरमान् पॆरुमाळ् नायनार् - 11.6 - पॊन्वण्णत्तन्दादि - 01-10
(कट्टळैक् कलित्तुऱै - meter)
पाडल् ऎण् : 1
पॊन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् मेनि; पॊलिन्दु इलङ्गुम्
मिन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् वीऴ्सडै; वॆळ्ळिक्कुण्ड्रम्-
तन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् माल्विडै; तन्नैक् कण्ड
ऎन् वण्णम् ऎव्वण्णम् अव्वण्णम् आगिय ईसनुक्के.
पाडल् ऎण् : 2
ईसनैक् काणप् पलिगॊडु सॆल्ल, "ऎट्रे इवळ् ओर्
पेयनैक् कामुऱु पिच्चिगॊलाम्" ऎण्ड्रु पेदैयर्मुन्
ताय् ऎनै ईर्प्पत्, तमियेन् तळर, अत्-ताऴ्सडैयोन्
"वा ऎनैप् पुल्ल" ऎण्ड्रान्; इमै विण्डन वाट्कण्गळे.
पाडल् ऎण् : 3
कण्गळ् अङ्गु अम् सॆय्यक्, कैवळै सोरक्, कलैयुम् सॆल्ल,
ऒण्-कळम् कण् नुदल् वेर्प्प, ऒण्-कॊण्ड्रैयन्दार्-उरुवप्
पॆण् कळङ्गम् इवळ् पेदुऱुम् ऎन्बदोर् पेदै-नॆञ्जम्
पण्गळङ्गम्इसै पाडनिण्ड्रु आडुम् परमनैये.
(* For interpretation - Lines 3 & 4 = पॆण् इवळ् पेदै-नॆञ्जम् पण्गळ् अङ्गम् इसै पाडनिण्ड्रु आडुम् परमनैये पेदुऱुम् ऎन्बदोर् कळङ्गम्.)
पाडल् ऎण् : 4
पर-मनैये बलि तेर्न्दु, नञ्जु उण्डदु; पन्मलर् सेर्
पिरमनैये सिरम् कॊण्डुम्, कॊडुप्पदु पेररुळाम्;
सर-मनैये उडम्बु अट्टुम्, उडम्बॊडु मादु इडम् आम्;
वर-मनैये किळै आगुम् मुक्कण्णुडै मादवने.
(* For interpretation, move "मुक्कण्णुडै मादवन्" to the beginning)
पाडल् ऎण् : 5
"तवने; उलगुक्कुत् ताने मुदल्; तान् पडैत्त-ऎल्लाम्
सिवने मुऴुदुम्" ऎन्बार् सिवलोगम् पॆऱुवर्; "सॆय्य
अवने अडल्विडै ऊर्दि; कडलिडै नञ्जम् उण्ड
बवने" ऎनच् चॊल्लुवारुम् पॆऱुवर् इप्-पारिडमे.
पाडल् ऎण् : 6
इड(म्) माल्, वलम् तान्; इडप्पाल् तुऴाय्, वलप्पाल् ऒण्-कॊण्ड्रै
वडमाल्; इडम् तुगिल्, तोल् वलम्; आऴि इडम्, वल(म्) मान्;
इड(म्) माल्-करिदाल्, वलम् सेदु इवनुक्कु; ऎऴिल्नलम् सेर्
कुडमाल् इडम्, वलम् कॊक्करैयाम्; ऎङ्गळ् कूत्तनुक्के.
(* For interpretation, move "ऎङ्गळ् कूत्तनुक्कु" to the beginning)
पाडल् ऎण् : 7
कूत्तुक् कॊलाम् इवर् आडित् तिरिवदु; कोल्वळैगळ्
पात्तुक् कॊलाम् पलि-तेर्वदु; मेनि पवळम् कॊलाम्;
एत्तुक् कॊलाम् इवर् आदरिक्किण्ड्रदु इमैयवर्दम्;
ओत्तुक् कॊलाम् इवर् कण्डदु; इण्डैच्चडै उत्तमरे.
(* For interpretation, move "इण्डैच्चडै उत्तमर्" to the beginning)
पाडल् ऎण् : 8
उत्तमराय् अडियार् उलगु आळत्, तमक्कु उरिय
मत्तम् अरा मदि माडु अम् पदि, नलम् सीर्मै कुण्ड्रा
ऎत्-तमरायुम् पणिगॊळ वल्ल इऱैवर्, वन्दु ऎन्
सित्तमराय् अगलादु उडन् आडित् तिरिदवरे.
(* This is my interpretation. Dharmapuram Adheenam urai intreprets line-2 differently)
पाडल् ऎण् : 9
तिरिदवर् कण्णुळ्ळुम् उळ्ळत्तिन् उळ्ळुम्; तिरिदरिनुम्
अरिदु अवर् तन्मै; अऱिविप्पदायिनुम्, आऴिनञ्जु एय्
करिदु अवर् कण्डम्; वॆळिदु अवर् सान्दम्; कण् मूण्ड्रॊडु, ऒण्ड्राम्
परि-तवर्; तामे अरुळ्सॆय्दु कॊळ्वर् तम् पल्-पणिये.
पाडल् ऎण् : 10
पणि पदम्; पाडु इसै; आडु इसैयागप्; पनिमलराल्
अणि, पदङ्गन् पऱ्-कॊळ् अप्पनै; अत्-तवऱ्के अडिमै
तुणि; पदम् कामुऱु; तोलॊडु नीऱु उडल् तूर्त्तु नल्ल
तणि पदम् काट्टिडुम्; सञ्जलम् नी ऎन् तनि-नॆञ्जमे.
(* line-2 - another possibility:
पनिमलराल् अणि; पदङ्गन् पऱ्-कॊळ् अप्पन्, ऐ, अत्-तवऱ्के अडिमै तुणि;)
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Seraman Perumal nayanar does not hear Siva's anklets' sound after his puja
# 3788 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 41
వానక్ గంగైనది పొదింద మల్గు-సడైయార్ వఴిబాట్టుత్
తూ-నఱ్-సిఱప్పిన్ అర్చ్చనైయాం తొండు పురివార్-తమక్కు ఒరునాళ్
తేన్ నక్కు అలర్న్ద కొండ్రైయినార్ ఆడఱ్-సిలంబిన్ ఒలి మున్బోల్
మానప్-పూసై ముడివిన్గణ్ కేళాదు-ఒఴియ, మదిమయంగి,
Seraman Perumal nayanar hears Siva's anklets' sound just as he was about to kill himself
# 3789 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 42
పూసై కడిదు ముడిత్తు, "అడియేన్ ఎన్నో పిఴైత్తదు?" ఎనప్ పొరుమి,
"ఆసై-ఉడంబాల్ మట్రు ఇని వేఱు అడైయుం ఇన్బం యాదు?" ఎండ్రు,
తేసిన్ విళంగుం ఉడైవాళై ఉరువిత్ తిరుమార్బినిల్ నాట్ట,
ఈసర్ విరైందు తిరుచ్చిలంబిన్-ఓసై మిగవుం ఇసైప్పిత్తార్.
Seraman Perumal seeks to know the reason for the delay
# 3790 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 43
ఆడఱ్-సిలంబిన్ ఒలి కేళా ఉడైవాళ్ అగట్రి, అంగైమలర్
కూడత్ తలైమేల్ కువిత్తరుళిక్కొండు, విఴుందు తొఴుదెఴుందు,
నీడప్ పరవి మొఴిగిండ్రార్, "నెడుమాల్ పిరమన్ అరుమఱై మున్
తేడఱ్కు అరియాయ్! తిరువరుళ్ మున్ సెయ్యాదు-ఒఴిందదు ఎన్?" ఎండ్రార్.
Siva tells that He was listening to Sundarar's singing in Chidambaram and hence the delay
# 3791 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 44
ఎండ్ర పొఴుదిన్ ఇఱైవర్దాం ఎదిర్-నిండ్రు-అరుళాదు, ఎఴుం ఒలియాల్,
"మండ్రినిడై నం కూత్తాడల్ వందు వణంగి వన్-తొండన్
ఒండ్రుం ఉణర్వాల్ నమైప్ పోట్రి ఉరై-సేర్ పదిగం పాడుదలాల్
నిండ్రు కేట్టు వరత్ తాఴ్త్తోం" ఎండ్రార్ అవరై నినైప్పిప్పార్.
Seraman Perumal embarks on his visit to Chidambaram and meet Sundarar
# 3792 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 45
"ఎన్నే! అడియార్క్కు ఇవర్ అరుళుం కరుణై ఇరుందవాఱు" ఎండ్రు,
పొన్ నేర్ సడైయార్ తిరునడం-సెయ్ పులియూర్ప్ పొన్నంబలం ఇఱైంజిత్,
తన్ నేర్ ఇల్లా వన్-తొండర్-తమైయుం కాణ్బన్" ఎన విరుంబి,
నన్నీర్ నాట్టుచ్ చెల నయందార్ నామచ్ చేరర్ కోమానార్.
Seraman Perumal worhsips Nataraja in Chidambaram
# 3802 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 55
అళవు-ఇల్ ఇన్బప్ పెరుంగూత్తర్ ఆడ ఎడుత్త కఴల్ కాట్ట,
ఉళముం పులముం ఒరువఴిచ్ చెండ్రు ఉరుగప్ పోట్రి ఉయ్గిండ్రార్,
కళనిల్ విడం వైత్తు అళిత్త అముదు అండ్రి, మండ్రిల్ కఴల్ వైత్తు
వళరుం తిరుక్కూత్తు-అముదు ఉలగుక్కు అళిత్త కరుణై వఴుత్తినార్.
Seraman Perumal sings "pon vaNNaththu andhAdhi"
# 3803 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 56
ఆరా ఆసై ఆనందక్-కడలుళ్ తిళైత్తే అమర్న్దు, అరుళాల్
సీర్ ఆర్ వణ్ణప్ పొన్వణ్ణత్ తిరువందాది తిరుప్పడిక్కీఴ్ప్
పార్ ఆదరిక్క ఎడుత్తు ఏత్తిప్ పణిందార్, పరువమఴై పొఴియుం
కారాల్ నిగర్క్క అరియ కొడైక్-కైయార్ కఴఱిట్రఱివార్దాం.
Seraman Perumal hears Siva's anklets' sound
# 3804 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 57
తంబిరానార్క్కు ఎదిర్-నిండ్రు తమిఴ్చ్-చొల్మాలై కేట్పిక్క,
ఉంబర్ వాఴ నడం ఆడుం ఒరువర్ అదఱ్కుప్ పరిసిల్ ఎనచ్,
చెంబొన్ మణిమండ్రినిల్ ఎడుత్త సెయ్య పాదత్-తిరుచ్చిలంబిన్
ఇంబర్ నీడ ఎఴుంద ఒలి తాముం ఎదిరే కేట్పిత్తార్.
Seraman Perumal starts on his journey to Thiruvarur
# 3807 - పెరియపురాణం - కఴఱిట్రఱివార్ పురాణం - 60
ఆడుం పెరుమాన్ పాడల్ కేట్టరుళిత్ తాఴ్త్తబడి తమక్కుక్
కూడుం పరిసాల్ మున్బు అరుళిచ్చెయ్ద నావలూర్క్కోవై
నీడుం పెరుంగాదలిల్ కాణ నిఱైంద నినైవు నిరంబ, మాల్
తేడుం పాదర్ అరుళినాల్ తిరువారూర్మేల్ సెల ఎఴుందార్.
సేరమాన్ పెరుమాళ్ నాయనార్ - 11.6 - పొన్వణ్ణత్తందాది - 01-10
(కట్టళైక్ కలిత్తుఱై - meter)
పాడల్ ఎణ్ : 1
పొన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం మేని; పొలిందు ఇలంగుం
మిన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం వీఴ్సడై; వెళ్ళిక్కుండ్రం-
తన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం మాల్విడై; తన్నైక్ కండ
ఎన్ వణ్ణం ఎవ్వణ్ణం అవ్వణ్ణం ఆగియ ఈసనుక్కే.
పాడల్ ఎణ్ : 2
ఈసనైక్ కాణప్ పలిగొడు సెల్ల, "ఎట్రే ఇవళ్ ఓర్
పేయనైక్ కాముఱు పిచ్చిగొలాం" ఎండ్రు పేదైయర్మున్
తాయ్ ఎనై ఈర్ప్పత్, తమియేన్ తళర, అత్-తాఴ్సడైయోన్
"వా ఎనైప్ పుల్ల" ఎండ్రాన్; ఇమై విండన వాట్కణ్గళే.
పాడల్ ఎణ్ : 3
కణ్గళ్ అంగు అం సెయ్యక్, కైవళై సోరక్, కలైయుం సెల్ల,
ఒణ్-కళం కణ్ నుదల్ వేర్ప్ప, ఒణ్-కొండ్రైయందార్-ఉరువప్
పెణ్ కళంగం ఇవళ్ పేదుఱుం ఎన్బదోర్ పేదై-నెంజం
పణ్గళంగమ్ఇసై పాడనిండ్రు ఆడుం పరమనైయే.
(* For interpretation - Lines 3 & 4 = పెణ్ ఇవళ్ పేదై-నెంజం పణ్గళ్ అంగం ఇసై పాడనిండ్రు ఆడుం పరమనైయే పేదుఱుం ఎన్బదోర్ కళంగం.)
పాడల్ ఎణ్ : 4
పర-మనైయే బలి తేర్న్దు, నంజు ఉండదు; పన్మలర్ సేర్
పిరమనైయే సిరం కొండుం, కొడుప్పదు పేరరుళాం;
సర-మనైయే ఉడంబు అట్టుం, ఉడంబొడు మాదు ఇడం ఆం;
వర-మనైయే కిళై ఆగుం ముక్కణ్ణుడై మాదవనే.
(* For interpretation, move "ముక్కణ్ణుడై మాదవన్" to the beginning)
పాడల్ ఎణ్ : 5
"తవనే; ఉలగుక్కుత్ తానే ముదల్; తాన్ పడైత్త-ఎల్లాం
సివనే ముఴుదుం" ఎన్బార్ సివలోగం పెఱువర్; "సెయ్య
అవనే అడల్విడై ఊర్ది; కడలిడై నంజం ఉండ
బవనే" ఎనచ్ చొల్లువారుం పెఱువర్ ఇప్-పారిడమే.
పాడల్ ఎణ్ : 6
ఇడ(మ్) మాల్, వలం తాన్; ఇడప్పాల్ తుఴాయ్, వలప్పాల్ ఒణ్-కొండ్రై
వడమాల్; ఇడం తుగిల్, తోల్ వలం; ఆఴి ఇడం, వల(మ్) మాన్;
ఇడ(మ్) మాల్-కరిదాల్, వలం సేదు ఇవనుక్కు; ఎఴిల్నలం సేర్
కుడమాల్ ఇడం, వలం కొక్కరైయాం; ఎంగళ్ కూత్తనుక్కే.
(* For interpretation, move "ఎంగళ్ కూత్తనుక్కు" to the beginning)
పాడల్ ఎణ్ : 7
కూత్తుక్ కొలాం ఇవర్ ఆడిత్ తిరివదు; కోల్వళైగళ్
పాత్తుక్ కొలాం పలి-తేర్వదు; మేని పవళం కొలాం;
ఏత్తుక్ కొలాం ఇవర్ ఆదరిక్కిండ్రదు ఇమైయవర్దం;
ఓత్తుక్ కొలాం ఇవర్ కండదు; ఇండైచ్చడై ఉత్తమరే.
(* For interpretation, move "ఇండైచ్చడై ఉత్తమర్" to the beginning)
పాడల్ ఎణ్ : 8
ఉత్తమరాయ్ అడియార్ ఉలగు ఆళత్, తమక్కు ఉరియ
మత్తం అరా మది మాడు అం పది, నలం సీర్మై కుండ్రా
ఎత్-తమరాయుం పణిగొళ వల్ల ఇఱైవర్, వందు ఎన్
సిత్తమరాయ్ అగలాదు ఉడన్ ఆడిత్ తిరిదవరే.
(* This is my interpretation. Dharmapuram Adheenam urai intreprets line-2 differently)
పాడల్ ఎణ్ : 9
తిరిదవర్ కణ్ణుళ్ళుం ఉళ్ళత్తిన్ ఉళ్ళుం; తిరిదరినుం
అరిదు అవర్ తన్మై; అఱివిప్పదాయినుం, ఆఴినంజు ఏయ్
కరిదు అవర్ కండం; వెళిదు అవర్ సాందం; కణ్ మూండ్రొడు, ఒండ్రాం
పరి-తవర్; తామే అరుళ్సెయ్దు కొళ్వర్ తం పల్-పణియే.
పాడల్ ఎణ్ : 10
పణి పదం; పాడు ఇసై; ఆడు ఇసైయాగప్; పనిమలరాల్
అణి, పదంగన్ పఱ్-కొళ్ అప్పనై; అత్-తవఱ్కే అడిమై
తుణి; పదం కాముఱు; తోలొడు నీఱు ఉడల్ తూర్త్తు నల్ల
తణి పదం కాట్టిడుం; సంజలం నీ ఎన్ తని-నెంజమే.
(* line-2 - another possibility:
పనిమలరాల్ అణి; పదంగన్ పఱ్-కొళ్ అప్పన్, ఐ, అత్-తవఱ్కే అడిమై తుణి;)
================ ============
No comments:
Post a Comment